Press "Enter" to skip to content

வெளிநாட்டிலிருந்து வந்த மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவனும் சடலமாக மீட்பு!

கொகரெல்ல, வேகம பிரதேசத்தில் கணவன் ஒருவன் தனது மனைவியை கூரிய ஆயுதங்களால் தாக்கிக்  கொலை செய்ததுடன், அந்த நபரும்  விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வேகம மற்றும் திவுலங்கடவல பிரதேசத்தை சேர்ந்த 49 மற்றும் 46 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவா்.

இருவரும் சுமார் 17 வருடங்களாக பிரிந்து வாழும் நிலையில் குறித்த பெண் வெளிநாட்டிலிருந்து டிசம்பர் 4 ஆம் திகதி வேகம கொகரெல்லவில் உள்ள தனது பெற்றோரின்  வீட்டுக்கு  திரும்பிய நிலையில், டிசம்பர் 6 ஆம் திகதி அவரது கணவர் அந்த வீட்டுக்குச் சென்று கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரும் அதே வீட்டுக்கு அருகில் விஷம் குடித்து கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தற்கொலை என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *